Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலஸ்தீன மக்களுக்கு இந்திய அரசின் இரண்டாம் கட்ட உதவி 

நவம்பர் 23, 2023 10:33

கெய்ரோ: பாலஸ்தீன மக்களுக்கு இந்திய அரசின் இரண்டாம் கட்ட உதவியாக சிறப்பு விமானம் மூலம் அத்தியாவசிய உதவிப் பொருட்களை எகிப்து நாட்டின் எல் அரிஸ் விமான நிலையத்துக்கு புதுடெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. 

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் கடுமையான தாக்குதலால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது மிகவும் கொடூரமானது. 

இந்த நிலையில் இடம் பெயர்ந்தும், குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு இரண்டாம் உதவி சிறப்பு விமானம் மூலம் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த விமானத்தில் வந்த பொருட்களை இந்திய தூதரக அதிகாரி பெற்று அதனை செம்பிறை சங்க அதிகாரிகளிடம் வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்